புத்தகப் பித்து.
பாலங்கள் - சிவசங்கரி
மூன்று தலைமுறை பெண்களைப் பற்றிய கதை. மிக அழகான நடை, ரொம்பவும் சுவாரிசயமா இருந்தது படிக்க. அந்தகால கலாச்சாரம், நடைமுறைகள், கல்யாணங்கள் ன்னு படிக்க ஆசையா இருந்தது. எங்க பாட்டி சொன்ன "அந்த காலத்துல நாங்க எல்லாம்" கதையெல்லாம் உடான்ஸா, இல்லையான்னு தெரிஞ்சுக்கிட்டென். 18 வருஷத்துக்கு மேல ஆச்சு படிச்சு. திரும்ப இப்ப படிச்சா எப்படி இருக்கும்னு தெரியலை.
சிவசங்கரியோட "நான் நானாக" சமீபத்தில் படிச்சேன். 40 வயசுக்கு மேலான ஒரு பெண், தன் மகன்கள் காலேஜ், வேலைன்னு போனதுக்கு அப்புறம் தனக்கென்று ஒரு ஆசையும் இல்லையேன்னு நினைச்சு, அவளுடைய பழைய ஆசையான பரதநாட்டியத்த கத்துக்க ஆரம்பிக்கறா. முதலில் புருவம் உயர்த்தும் குடும்பம், பிறகு அவள புரிஞ்சுக்கறாங்க. மிக அழகான கதை.
கடல் புறா - சாண்டில்யன்
சுத்தமா நியாபகம் இல்லை. படிச்சது மட்டும் தான் நினைவு இருக்கு. சாண்டில்யன் எல்லாம், பத்தாவது முடிச்சதுக்கு அப்புறம் தான் படிக்கணும்னு அம்ம ஆர்டர். அதுக்காகவே அவசர அவசரமா படிச்சு முடிச்சேன். சரித்தர கதைன்னா எனக்கு உயிர். "மன்னன் மகள்" கூட படிச்ச நினைவு. அடுத்த இந்தியா ட்ரிப்புல பொட்டிப்பூரா சாண்டில்யன் தான்!
டிரங்குப்பெட்டில இருந்த இன்னொரு புத்தகம், சுஜாதாவின் பிரிவோம், சந்திப்போம். டீன்ஏஜ்ல இருந்த எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. கமல்ஹாசன், ஸ்ரீபிரியா போட்டோ போட்டு இருக்கும், வாரா வாரம். சினிமாவா வந்துதான்னு தெரியலை. ஆ மற்றும் கரையெல்லாம் ஷெண்பகப்பூ கூட படிச்சேன். கரையெல்லாம் ஷெண்பகப்பூ கதை எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது, சினிமா சகிக்கலை. சுஜாதாவோட b சிறுகதைகளுக்கு நான் அடிமை. இப்போ ஆனந்த விகடன்ல வர்ற அவரோட "கற்றதும், பெற்றதும்" தொடர நான் தொடர்ந்து படுச்சுட்டு வர்றேன்.
கல்கி கிருஷ்ணமூர்த்தி
இந்த மனிதர பத்தி சொல்ல பாக்கி என்ன இருக்கு? இவரும் ஆங்கில எழுத்தாளர் ரோல்ட் டாலும் தான் எனக்கு உலகிலேயே மிகவும் பிடித்த எழுத்தாளர்கள். தமிழ் தெரிஞ்ச அனைவருக்கும் பொன்னியின் செல்வன் பிடிச்சு இருக்கும். அற்புதமான் புத்தகம். மூன்று வருடத்துக்கு முந்தி தான் படிச்சேன். ஐந்தாம் பாகத்த, பத்து மணி நேர விமான பயணத்துல கண்கொட்டாம படிச்சு முடிச்சேன். நான் பிறந்த ஊர் கும்பகோணம். அதனால வேற இந்த புத்தகம் மேல அலாதி பாசம். அவர் விவரிக்கும், கோயில், குளமெல்லாம் நம்ப பேட்டையாச்சே. சோழர்கள பத்தி பாட புத்தகத்தை விட இந்த புக்ல தான் அதிகம் தெரிஞ்சுக்கிட்டேன். பேசாம், ஸ்கூல் சிலபஸ்ல இந்த புக்கயும் வைக்கலாம்.
பொன்னியின் செல்வனுக்கு முந்தி, சிவகாமியின் சபதம் படிச்சேன். லண்டன்ல இருந்தோம் அப்ப. எங்க லோகல் லைப்ரரில இந்த புக்க பாத்து எனக்கு ஒரே ஆச்சர்யம். அப்புறம் அலை ஓசை வாங்கி படிச்சேன். அவரோட சிறுகதைகள்னா எனக்கு உயிர். கல்கில வந்துட்டு இருந்தது அவரோட கதைகள் சமீபத்தில். வீணை பவாணி, சுண்டுவின் சந்யாசம், கைலாசமய்யர் காபரா,.. இப்படி நிறைய. பல கதைகள படிச்சுட்டு, விழுந்து, பிரண்டு சிரிச்சுருக்கேன். ஒரு உதாரணம்:
கைலாசமய்யர் காபரா -
பாம்பை அடிக்க வேலைக்காரன் கொண்டு வந்த தடியைக் கைலாசமய்யர் பிடுங்கிக் கொண்டு பையனை அடிக்கப் போனார். நல்ல வேளையாக, அந்தச் சமயம் ஜோஷனாரா பீகம் வந்து குறுக்கிட்டதால் பையன் பிழைத்தான்! ஜோஷனாரா பீகம் என்றதும், சில பேருக்குச் சுவாரஸ்யம் தட்டலாம். ஏதோ இந்தக் கதையில் நவாபுகளும் அவர்களுடைய அந்தப்புரத்து அழகிகளும் வரப் போகிறார்கள் என்று நினைக்கலாம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கைலாசமய்யருக்கு வடக்கத்தி ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் அதிகப் பிரியம். "பயமில்லாமல் கேட்கக் கூடியது ஹிந்துஸ்தானி சங்கீதந்தான்" என்பார். ரேடியோவில் அவர் அடிக்கடி லக்னௌ ஜோஷனாரா பீகத்தின் சங்கீதத்தைக் கேட்பதுண்டு. ஆனால், வீட்டிலே மற்றவர்களுக்கு - முக்கியமாக அவருடைய மனைவிக்கு - ஜோஷனாரா பீகமும், அவளுடைய சங்கீதமும் கொஞ்சமும் பிடிப்பதில்லை. எனவே, அவர்கள் வீட்டில் வளர்த்த ஒரு கறுப்புப் பூனைக்கு 'ஜோஷனாரா பீகம்' என்று பெயரிட்டிருந்தார்கள். இந்த ஜோஷனாரா பீகத்தைக் கண்டால் கைலாசமய்யருக்குக் குலை நடுக்கம்! அச்சமயம் அந்தப் பூனை வந்ததினால் தான் அவருடைய பையன் மண்டை உடையாமல் தப்பிப் பிழைத்தான்.
கல்கி ஒரு மேதாவி என்பதில் என்ன சந்தேகம்? அவருடைய அத்தனை சிறுகதைகளையும் படித்து முடிக்கணும்ன்னு என் ஆசை.
தி. ஜானகிராமனுடைய பிரபலமான நாவல், "மோகமுள்" படித்ததில்லை. போன மாதம் அக்கா வீட்டுக்கு போயிருந்தபோது, அவருடைய "செம்பருத்தி" படிக்க ஆரம்பித்தேன். ரொம்ப நல்லா இருந்தது. நாற்பதுகளில் நடக்கும் கதை. சட்டநாதன் பிள்ளை என்கிற இளைஞனின் வாழ்க்கை பற்றி, அவன் எப்படி தன் குடும்பத்தையும், தனது இரு அண்ணன் குடும்பங்களையும் கஷ்டப்பட்டு முன்னுக்கு கொண்டுவருகிறான் என்ற கதை. புக்க முடிக்கறதுக்குள்ள ஊருக்கு கிளம்பிட்டேன். சீக்கரம் படித்து முடிக்கணும். இந்த புக்ல பெண்களின் உணர்ச்சிகளும், அவங்களோட மனதையும் ரொம்ப யதார்த்தமா சொல்லியிருக்கறது, எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது.
பாலகுமாரனோட புத்தகங்கள் ஒரு பத்து, பன்னெண்டு படிச்சுருப்பேன். ஆனால், ஒரு பேர் கூட ஞர்பகம் இல்லை. எனக்கு அவர ரொம்ப பிடிக்காது, ஆனால் அவரோட சில புத்தகங்கள் என்னை சிந்திக்க வச்சிருக்கு. அது பெரிய விஷயம் தான? பெண்கள் இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்னு இவர் சொல்லாம இருந்தா ஒரு வேளை, எனக்கு இவரை பிடித்து இருக்கலாம்!
வாழ்க்கையில் முதல் முறையா ஒரு தொடர்கதை படிச்சேன். ஆனந்த விகடன்ல. அதுக்கு முன்னாடி, இப்படி வாரா வாரம் தொடர்ந்து படிச்சதில்லை. அது கவிஞர் வைரமுத்துவின் "கருவாச்சி காவியம்". வைரமுத்து மேல் எனக்கு ரொம்ப மதிப்பு இருந்ததில்லை. ஏன்னு தெரியலை. ஒரு வேளை, அவரோட சில சினிமா பாடல்களால இருக்கலாம். ஒரு நாள், ரொம்ப போர் தாங்காம, விகடன்ல அவரோட தொடர்கதைய படிக்க போய், அப்படியே அடிக்ட் ஆயிட்டேன். கிட்டதட்ட நாற்பது வாரமும் தொடர்ந்து படிச்சேன். மனுஷர் என்னமா எழுதுயிருக்கார்! கருவாச்சி என்கிற கிராமத்து பெண். அவளோட சுக, துக்கங்கள், வாழ்க்கை போராட்டம் - இது தான் கதை. சில அத்தியாயங்கள் அப்படியே குலைநடுங்க வச்சுடுச்சு. மணியம் செல்வமின் படங்கள் வேற ரொம்ப தத்ரூபம். அடுத்து கருவாச்சி என்ன பாடு படபோறாளோன்னு வேதனை, அந்த படங்கள பார்த்தா. அதிலும், ஒரு அத்தியாயத்தில் கருவாச்சியோட பிரசவத்த வைரமுத்து விவரிச்சத படிச்சதில், எனக்கே செத்து பிழைச்ச மாதிரி இருந்தது. திருமதி.வைரமுத்து எழுதினாங்களோன்னு சந்தேகம்! கிராமத்து பேச்சும், வழக்கும், கலாச்சாரமும்னு மனுஷர் ரொம்ப மெனெக்கெட்டு எழுதியிருக்கார். கொஞ்ச காலம், கிராமத்துல இருந்ததுனாலேயோ என்னமோ, எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.
இந்திய எழுத்தாளர்கள் பற்றிய tag இது. தமிழ் புக்கா படுச்சுட்டு, ஆங்கிலத்துல பதிவு போட்டா எப்படின்னு தோணினதுனால தமிழ்லயும் போட்டுட்டேன். ஆங்கில பதிவு இங்கே.
பி.கு.
அந்த காலத்துல படிச்சதெல்லாம், அவ்வளவு சுலபமா ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. அதுக்கு ஒரு காரணம், ஒளிஞ்சு ஒளிஞ்சு படிச்சதுதான். எங்க அப்பாக்கு புக் படிச்சாளே பிடிக்காது. எங்கையாவது படிச்ச புக்க பத்தி பேச்சு வந்து, நம்பளும் வாய குடுத்து அவர்கிட்ட வாங்கி கட்டிப்போமோன்னு பயம். இது போறாதுன்னு, என்னோட கூட படிச்சவங்கெல்லாம் ஒரே ரமணி சந்திரன் விசிறிகள். (நானும் தான்!) அதுக்கு அப்புறம் காலேஜ் வந்தவுடன், "இங்கிலீஸ்"க்கு மாறியாச்சு. இதுல ஜோக் என்னன்னா, நான் இங்கிலீஷ் புக்கும் கையுமா இருந்தா எங்க அப்பா ஒண்ணும் சொல்ல மாட்டார். அப்பாவி மனுஷர்!




11 Comments:
Boo.. that was a lovey post. I have not read any of the books mentioned in your posts.. But after reading yours.. am going to try and pick up to read atleast one of them
boo. நானும் பல முறை ரோல்டால் பற்றி இங்க எழுதியும் யாரும் கண்டுக்கவில்லை. முதல்முறையாய் நீங்க சொன்னதும்
ஆஹான்னு தோணிச்சு. அவரோட அத்தனை குழந்தைகளுக்கான கதைகளும், சிறுகதை தொகுப்பும், சோலோவும்
படிச்சாச்சு, ஆரம்பிக்க பேசலாம் :-)
அதேப்போல, தி.ஜா.ர அவர்களின் அனைத்து படைப்புகளையும் (அடி மற்றும் மரப்பசு தவிர)படித்ததில் மனம் கவர்ந்தது
செம்பருத்தியே!
பாலக்குமாரனின் நாவல்கள் ஏறக்குறைய அனைத்தும் படித்தும் மனதில் ஒட்டவில்லை.
காரணம் நீங்கள் சொல்லும் அட்வைஸ்ஸாக இருக்கலாம் :-)
Blogeswari - Im glad even I inspired someone by my meagre list! ;)
உஷா - நானும் அவரோட அத்தனை புக்கும் படிச்சுட்டேன்னு நினைக்கறேன். என்னோட கணவர் எனக்கு பரிசு குடுக்க யோசிக்கவே வேண்டாம். ஒவ்வொரு பிறந்த நாள், கல்யாண நாளுக்கும் ரோல்ட் டால் தான்! எனக்கு அவரோட சின்ன வயசு கதை "boy" ரொம்ப பிடிக்கும். சிறுகதைகள் எல்லாம் சான்ஸே இல்லை. என்ன ஒரு Talent. Just wow! Favorite short story எதுன்னே சொல்ல முடியாது, அத்தனையும் அல்வா! :)
Boo, அதெப்படி "டான்சில்ஸ் ஆபரேஷனையும், கஸீன் காரேட்டி அடிப்பட்டத்தையும், டாய்லெட் சீட் சூடாக்க பள்ளி ஹாஸ்டலில்
ஆசிரியர்களின் கொடுமையையும் மறந்தேன் :-)
Boo, how do I read your blog in real tamil? (I see tamil, with the kombu's and kaals in weird places...) Do i have to install any particular font? adjust my browser settings? can you tell me please?
கருவாச்சி காவியத்தோடு நிறுத்தி விடாமல் கொஞ்சம் கள்ளிக்காட்டு இதிகாசமும் படித்துப் பாருங்கள். ஒத்துக் கொள்வீர்கள் வைரமுத்து மிகப்பெரிய திறனாய்வாளர் என்பதை!!!
பதிவு அருமை. நன்றி.
//பாலங்கள் - சிவசங்கரி
மூன்று தலைமுறை பெண்களைப் பற்றிய கதை........திரும்ப இப்ப படிச்சா எப்படி இருக்கும்னு தெரியலை.
//
நேற்றுதான் இந்தக் கதையைப் பற்றி என் சகோதரியிடம் பேசிக்கொண்டிருந்தேன். பெயரை மறந்துவிட்டேனா, அவர் தன் அலுவலக பணிகளுக்கிடையில் சிவசங்கரியின் வலைத்தள இணைப்பையும் 'பாலங்கள்' கதைக்கான இரண்டு பக்க இணைப்பையும் தந்து உதவினார்.
http://www.sivasankari.com/tamil/novel/palangal_1.htm
ஆனந்தவிகடனில் தொடர்கதையாக வந்த நியாபகம். படிக்கத் தவறிய ஒரு தொடர்கதை. இப்போது anyindian.comல் பார்த்தேன், 70 ரூபாய்க்குப் போட்டிருக்கிறார்கள் வானதி பதிப்பகத்தார். சென்னை செல்லும்போது வாங்க உத்தேசம்.
4 வருடங்களுக்கு முன்னர், சிவசங்கரியின் தொகுப்பில் வந்த 'மிகச்சிறந்த தமிழ் சிறுகதைகள்' என்று இரண்டு பாகங்களாக வந்த சிறுகதைத் தொகுப்புதான் நான் சமிபத்தில் வாசித்தது எனலாம். நேரம் கிடைத்தால் அவசியம் அவற்றை வாசிக்கவும். அத்தனையும் அற்புதமான சிறுகதைகள். சிவசங்கரியின் ரசனையும், நல்ல சிறுகதைகளைப் போற்றும் நற்குணமும் என்னைக் கவர்ந்த பிற விஷயங்கள்.
im just learning to read tamil and ur writing is simple to understand!
...and ur english blog is hilarious at places!
Have you read some of contemporary tamil writers apart from sujatha? S. Ramakrishnan is one of the most prolific writers in Tamil. His Thunai ezhuthu (vikatan publication) is a notable collection of tamil eassays. You must read…
Boo, இப்போலாம் தமிழ்ல எழுதறது இல்லையா? மறுபடியும் எழுதுங்களேன். Please? ரொம்ப நாள் கழிச்சு உங்க Boo's baby talk blog பக்கம் வந்தேன்... ரொம்ப நல்ல எழுதறீங்க. தமிழையும் எழுதுங்களேன்.
நானும் உங்கள போலத்தான் புத்தக பித்து. ஒளிச்சு வச்சு படிச்ச எந்த கதையும் நியாபகம் இல்ல. ராஜ முத்திரை முட்டும் ஓரளவுக்கு நியாபகம் இருக்கு.
ரொம்ப வருஷமா படிக்கிறது விட்டு போச்சு இப்போ தான் ரெண்டு மாசமா தட்டு தடுமாறி படிக்க ஆரம்பிச்சுருக்கேன். மெதுவா பழைய கடை எல்லாம் revisit பண்ணனும். They're almost like friends. Want to read them all over again with grown up eyes.
Tagged again!
http://blogeswari.blogspot.com/2009/06/blog-post.html
Post a Comment
<< Home